கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
வைகோவின் மீலாது வாழ்த்து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மீலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
சத்தியம் காத்திட, நித்தமும் போராடிய உத்தம திரு நபி (ஸல்) அவர்களின் உதய தின விழா உலகெங்கும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.அநீதிக்கும், அக்கிரமத்திற்கும் , அஞ்ஞானத்திற்கும் எதிராக வாளேந்தி அண்ணல் நபிகள் (ஸல்) சந்தித்த எண்ணிலிடங்காப் போர்க்களங்கள்இலட்சியவாதிகளின் இதயத்திற்கு எழுச்சியூட்டுவனவாகும்.
கண்டங்கள் பல வென்ற போதிலும், அந்தக காவிய நாயகரின் வாழ்க்கை எளிமைக்கு இலக்கணமாகவே திகழ்ந்தது. அந்த மாநபி (ஸல்)யின் வாழ்க்கைஇலட்சியவாதிகளுக்கு என்றென்றும் வழிகாட்டுவதாகும்.
பிறர் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள் என்று திருமறை அருளிய நெறிப்படி வாழ்ந்த மனித குலம் கண்ட மகத்தான வழிகாட்டியை இன்று நினைவுகூர்ந்து நாட்டை நல்வழிப்படுத்தக் கிட்டிய நற்பேறாகும்.
சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உருவாக்க சபதம் ஏற்போம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications