தமிழகத்தில் இன்று
திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு புரளி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருச்சி:
திருச்சி ரயில் நிலையத்தில் அநாதையாகக் கிடந்த சாக்குப் பை மற்றும் கைப்பையில் வெடிகுண்டு இருப்பதாக கிளம்பிய புரளியையடுத்து ரயில் நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் நிலையத்தின் 7-வது பிளாட்பாரத்தில் அநாதையாகக் கிடந்த சாக்கு மற்றும் கைப்பையில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளம்பியது. இதையடுத்துபோலீஸாருக்கு ரயில் நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சாக்குப்பையின் உள்ளே டேப் ரெக்கார்டர், சுவர் கடிகாரம், ஒரு டேபிள் ஃபேன், ஸ்டீரியோக்கள், கம்ப்யூட்டர் மவுஸ் ஆகியவை இருந்தன.
ரயில்வே போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பைக்குரியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.