For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

By Staff
Google Oneindia Tamil News

Rojaசினிமா பைனான்சியரை மிரட்டியதாக நடிகை ரோஜா மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், அழகர்சாமி, ஊட்டி போன்ற பல்வேறு தமிழ்ப்படங்களில் நடித்து தமிழ்திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் நடிகை ரோஜா.

ஒரு படத்தில் நடிப்பதற்காக சென்னையைச் சேர்ந்த முகுந்த் சந்த் போத்ரா என்ற பைனான்சியர் ரோஜாவுக்கு ரூ. 8லட்சம் பணம் கொடுத்தார். ஆனால் அவர் படம் எடுக்காததால் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு நடிகைரோஜாவிடம் அவர் கேட்டார்.

அதற்கு நடிகை ரோஜா ரூ 8 லட்சத்திற்கான செக் ஒன்றை அவரிடம் கொடுத்தார். ஆனால் அந்த செக் பணம்இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதனால் ரோஜா மீது போத்ரா, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர்இந்த வழக்கில் பைனான்சியர் போத்ராவும், நடிகை ரோஜாவும் சமாதானமாகப் போய்விடுவதாகஒத்துக்கொண்டனர்.

இந்த நிலையில், நடிகை ரோஜாவும், அவரது தம்பியும் சேர்ந்து தன்னை மிரட்டியதாக போத்ரா மற்றொரு வழக்குத்தொடர்ந்தார்.

அந்த வழக்கு வியாழக்கிழமை தீர்ப்புக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறுநீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. விசாரணை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த நீதிபதி, இதன்படி போத்ரா தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X