Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மனித வெடிகுண்டாக வந்தவர் சிங்களர்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

கொழும்பு புறநகரான வட்டாலே என்ற இடத்தில் புதன்கிழமை நடந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் மனித வெடிகுண்டாக வந்தவர், விடுதலைப் புலி அல்ல,சிங்களர் என்பது தெரிய வந்துள்ளது.

மனித வெடிகுண்டாக வந்த சிங்களர் ஒரு தச்சர். மொரட்டுவா என்ற பகுதியைச் சேர்ந்தவர். உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு சைக்கிளில் வந்தஅந்த சிங்களர், சாலையில் வந்த விமானப் படை வீரர்கள் இருந்த பஸ் மீது மோதினார். ஆனால் பஸ் மயிரிழையில் தப்பியதால் பெரும் சேதம்தவிர்க்கப்பட்டது. சாலையில் இருந்த மூன்று அப்பாவிப் பொதுமக்கள் இறந்தனர்.

மனித வெடிகுண்டாக வந்தது விடுதலைப் புலி என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கும், இந்த நபருக்கும் சம்பந்தம் இல்லை. இவர் ஒருசிங்களர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மனித வெடிகுண்டு நபரின் சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து அவர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நபரின் மனைவிகைது செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகள் இந்த நபரை ஏவி விட்டனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிங்களர் ஒருவர், மனித வெடிகுண்டாக வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ உதவித் தளபதி மாற்றம்:

இதற்கிடையே, இலங்கை ராணுவத்தின் உதவித் தளபதியாக மேஜர் ஜெனரல் லியோனல் பெல்லகல்லே நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புப் படையின் பொறுப்பில் இருக்கும் பெல்லகல்லே இருந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளள்.

யு.என்.ஐ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+