கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
-பு-தி-ய மு-றை-யில் இடஒதுக்கீடு கோ-ரு-கி-ற-து வன்னியர் சங்கம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
தமிழ்நாட்டில் மண்டல வாரியாக இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வன்னியர் சங்க தலைவர் ஏ.கே.நடராஜன் வலியுறுத்தினார்.
வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. தமிழ்நாட்டில் தெற்குமற்றும் மேற்குப் பகுதிகளில் வன்னியர்கள் மிகவும் குறைவாக உள்ளனர்.
வடமண்டலத்தில் 40 சதவீதமும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் 10 சதவீதமும், புதுவையில் 60 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்.
ஜூலை 2 ம் தேதி ஈக்காட்டுத் தாக்கலில் சென்னை மாவட்டக் கோரிக்கை மாநாடு நடைபெறும்.
வன்னியர்களின் பொதுச் சொத்துக்களை ஒருங்கிணைத்து, வன்னியர்களைப் பராமரிக்கும் வகையில் வன்னியர் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அதனால்இப்போதைக்கு அவருக்கு நாங்கள் ஆதரவு தருவோம்.
தமிழக அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்ற எண்ணம் பாமக தலைவர் ராமதாசுக்கு வந்துவிட்டது. அவருக்கு உண்மையிலேயே அந்தஎண்ணம் இருக்குமானால் அவர் தனித்துப் போட்டியிடட்டும் என்று கூறினார் நடராஜன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications