தமிழகத்தில் இன்று
விண்-ணப்-பித்-த 24 மணி நேரத்-தில் மின் இணைப்-பு, -உ-று-தி-ய-ளிக்-கி-றார் அமைச்-சர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் விண்ணப்பித்த 24 மணிநேரத்தில் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்படும். தொழிற்சாலைகளுக்கு ஒரு வாரத்திற்குள் மின் இணைப்பு வழங்க -முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது என தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவிலேயே முதல் -முறையாக கோவை மண்டலத்தில் உள்ள வீடுகளுக்கு உடனடி மின் இணைப்புக் கொடுக்க -நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் இணைப்புக் கோ-ரி விண்ணப்பித்த 24 மணி-நரத்தில் மின் இணைப்பு வழங்க -நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவைமண்டலத்தில் ரூ. 70 கோடி செலவில் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டு உள்ளது. இதனால் இங்கு 100 சதவீதம் மின் தேவை பூர்த்திசெய்யப்பட்டு விடும்.
தமிழகம் முழுவதிலும் ஆண்டுக்கு 40 ஆயிரம் பம்ப் செட்டுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பம்ப்செட்டுகளுக்கு விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் மின் இணைப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு ஆற்காடு வீரசாமி தெரிவித்தார்.