தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அகதிகளை மீட்பதை ஐ.நாவிடம் ஒப்படைக்க இந்தியா பரிசீலனை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராமநாதபுரம்:

இலங்கையிலிருந்து, ராமேஸ்வரத்திற்கு அகதிகளாக தப்பி வரும் தமிழர்களைப் பராமரிப்பது தொடர்பாக ஐ.நா.சபையை அணுக இந்திய மற்றும் இலங்கைஅரசுகள் முடிவு செய்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே போர் வலுத்திருப்பதால் அங்கிருந்து தமிழர்கள் பலர் அகதிகளாக தமிழகம்வந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்திற்குத் தப்பி வரும் அவர்களை கடலிலிருந்து மீட்கும் பொறுப்பை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்திடம், ஒப்படைப்பது பற்றி இருஅரசுகளும் தீவிரமாகப் பரிசீலித்துக் கொண்டுள்ளன.

இலங்கையிலிருந்து தப்பி வரும் அகதிகள் அங்குள்ள படகுக்காரர்களுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு வருகின்றனர். இவர்களை, படகுக்காரர்கள்,தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே இலங்கை எல்லையில் இருக்கும் ஆடம்ஸ் பிரிட்ஜ் தீவில் இறக்கி விட்டு விடுகின்றனர். இப்படி இறக்கிவிடப்பட்ட அகதிகள், அடுத்த நாள்தான் மீட்கப்படுகின்றனர்.

இலங்கை எல்லைக்குள் சென்று அகதிகளை மீட்க முடியாது என்பதால், ஆடம்ஸ் தீவில் இறக்கி விடப்பட்டஅகதிகளை மீட்பதற்கு தமிழக அரசுஅதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ஆறாம் திட்டுத் தீவில் மொத்தம் 47 அகதிகள் தவித்துக் கொண்டுள்ளனர். 13-ம் தேதி 23 பேரும், 15-ம் தேதி 24 பேரும் இந்தத்தீவில் இறக்கி விடப்பட்டனர். இவர்களில் சிலர் நீந்தியே இந்திய எல்லைக்குள் வந்தனர். அவர்களை இந்தியக் கடற்படை மீட்டு கரை சேர்த்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+