For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

டான்சி வழக்கு: ஜெ., சசிக்கு எதிராக
கைது வாரண்ட் - நீதிபதி எச்சரிக்கை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜூன் 23-ம் தேதி ஜெயலலிதாவும், சசிகலாவும் விசாரணைக்கு ஆஜராகவில்லைஎன்றால் அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று 3-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.அன்பழகன் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை வாங்கியதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்புஏற்படுத்தியதாக சசி எண்டர்பிரைசஸ் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குதாரர்கள் என்றமுறையில் ஜெயலலிதா மற்றும் அவரது நெருங்கிய தோழி சசிகலா ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஜெ., சசி தவிர முன்னாள் அமைச்சர் முகம்மது ஆசீப் உள்பட மேலும் 4 பேர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இவ் வழக்கு விசாரணை 3-வது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ் வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் ஜூன் 23-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில்ஆஜராகவேண்டும். அன்றைய தினம் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அன்பழகன்அறிவித்திருந்தார்.

ஆனால், தமிழகம் முழுவதும் பல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவேண்டியுள்ளது. அதனால், ஜூன் 23-ம்தேதி விசாரணைக்கு வரமுடியாது. ஆகவே, வேறு ஒரு தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்கவேண்டும் என்று ஜெ.,சசி இருவரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம் மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.

மனுவில் கூறப்பட்டதையே ஜெ. மற்றும் சசிகலாவின் வழக்கறிஞர்கள் மீண்டும் எடுத்துரைத்தனர். ஆனால்,அவர்களது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி அன்பழகன், ஜூன் 23-ம் தேதி ஜெயலலிதாவும், சசிகலாவும் கட்டாயம்ஆஜராகவேண்டும். நீதிமன்ற நடைமுறைகளை விரைவில் முடிக்க வேணடியுள்ளதால் இருவரும்ஆஜராகவேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவேண்டி வரும் என்றுஅறிவித்தார்.

இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 4 பேருடைய வழக்கறிஞர்களும் மனுத் தாக்கல் செய்தனர்.விசாரணையைச் சந்திக்கும் மன நிலையில் மனுதாரர்கள் இல்லை. ஆகவே, விசாரணையை வேறு ஒரு தேதிக்குஒத்தி வைக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம் மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இம் மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்றுகூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X