தமிழகத்தில் இன்று
நீலகிரியில் 900 ஏக்கர் வன நில ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
நீலகிரியில் 900 ஏக்கர் வன நில ஆக்ரமிப்பு அகற்றும் பணி, பலத்த போலீஸ்பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வனப் பகுதியைச் சேர்ந்த பாடந்துறை என்ற பகுதியில்வன நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இப்பகுதியில் 900 ஏக்கர் வனப்பகுதியை முறைகேடாக பட்டாப் போட்டுஆக்கிரமிப்பாளர்கள் குடியிருந்து வந்தனர்.
கடந்த 1998ம் ஆண்டு இது அரசின் கவனத்திற்கு வந்தது. உடனே அரசு வழங்கப்பட்டபட்டாக்களை ரத்து செய்து ஆக்ரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்தது.
900 ஏக்கர் நிலப் பகுதியிலிருந்தும் ஆக்ரமிப்பாளர்களை வெளியேற்ற அரசு தீவிரநடவடிக்கையில் இறங்கியது. பகுதி, பகுதியாக ஆக்ரமிப்பாளர்கள்வெளியேற்றப்பட்டனர்.
கடந்த ஆண்டு நடந்த ஆக்ரமிப்பு அகற்றும் பணியின்போது பெரும் போராட்டம்நடந்தது.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இந்தப் பகுதியில் உள்ள ஆக்ரமிப்பு அகற்றும்பணியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் எவ்விதப் போராட்டத்திற்கும் வழியின்றி ஆக்ரமிப்பு அகற்றும் பணி நடந்துவருகிறது. இப்பணி செவ்வாய்க்கிழமை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில்148 ஏக்கர் நிலம் மீட்கப்படும் என தெரிகிறது.
ஆக்ரமிப்பாளர்கள் பல ஆண்டுகளாக வனப்பகுதியை அழித்து தேயிலை, காபி,காய்கறி போன்ற பயிர்களைப் பயரிட்டு வந்துள்ளனர். சில பகுதியில் முன்னாள்ராணுவத்தினரும் ஆக்ரமிப்பில் ஈடுபட்டிருந்தனர்.