தமிழகத்தில் இன்று
பிஜி: அரசாங்-கத்-தில் இந்தியர்களுக்-கும்-- இடம் உண்-டு என்கிறார் "கோமா-ளி" ஸ்பீட்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:
பிஜித் தீவில் அமைக்கப்படவுள்ள அரசில் இந்தியர்கள் இடம் பெற்றால் அதை வரவேற்போம் என்று புரட்சியாளர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்கூறியுள்ளார்.
பிஜித் தீவில் மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் ஆயுதப் புரட்சி நடந்தது. இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி ஆட்சிகவிழ்க்கப்பட்டது. அவரும், பல எம்.பிக்களும், சிறை வைக்கப்பட்டனர். சில நாட்களில் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு ஸ்பீட்டுக்கும்,ராணுவத் தளபதி பைனிமராமாவுக்கும் இடையே பேச்சு நடந்தது. அதில் முன்னேற்றம் இல்லை.
இந்த நிலையில் உலக அளவில் புரட்சியாளர்கள் மற்றும் ராணுவ ஆட்சியாளர்ளுக்கு எதிர்ப்பு வலுத்தது. பக்கத்து நாடுகளான ஆஸ்திரேலியாவும்,நியூசிலாந்தும், பொருளாதாரத் தடை விதிப்பதாக மிரட்டின. இதனால் பயந்து போன பிஜி ராணுவ ஆட்சியாளர்கள், இடைக்கால அரசு விரைவில்அமைக்கப்படும் என்று அறிவித்தனர். தற்போது அந்த அரசில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டால், அதை எதிர்க்க மாட்டோம் என்று ஸ்பீட்கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்பீட் கூறுகையில், புதியஅதிபர் பதவிக்கு வந்த பிறகு அமைக்கப்படும் அமைச்சரவையில் இந்தியர்கள் சேர்க்கப்படலாம். அதற்கானவாய்ப்புகள் உள்ளன. அப்படி நேர்ந்தால் அதை வரவேற்போம்.
புதிய அமைச்சரவையில் நான் இடம் பெற மாட்டேன். கொள்கை ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அது சரியல்ல. புரட்சியையும் நடத்தி விட்டு,அரசுக்குத் தலைமை தாங்கவும் கூடாது. அது தவறு என்றார் ஸ்பீட்.
நியூசிலாந்து தொழிற்சங்கத்தின் தடை அமல்:
இதற்கிடையே, பிஜித் தீவு மீது ஒரு வார பொருளாதாரத் தடையை நியூசிலாந்து தொழிற்சங்க யூனியன் விதித்துள்ளது. இந்த ஒரு வார காலத்திற்கு பிஜிக்குஎந்தவிதப் பொருளும் அனுப்பப்பட மாட்டாது. அதே போல பிஜியிலிருந்தும் எந்தப் பொருளும் பெறப்பட மாட்டாது.
இந்தத் தடையில் நியூசிலாந்து அரசு தலையிடாது என்று அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மார்கரெட் வில்சன் கூறியுள்ளார். தொழிலாளர்கள்சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது என்று 1987-ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை அரசு மதிக்க வேண்டும் என்றார்வில்சன்.
பிஜித் தீவின் முக்கியத் தொழில் கரும்பு பயிரிடுதலும், சுற்றுலாவுமே. இவை இரண்டும், மே புரட்சிக்குப் பிறகு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications