கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
போலீஸ் ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கம்யூ. புகார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஆளும் கட்சியினர், காவல்துறையினர் பின்பலத்தோடு கள்ளச் சாராயம்விற்கப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநலச் செயலாளர் நல்லகண்ணுகுற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திருவாரூர் அருகே மேலப்பனையூர் கிராமத்தில் விஷச் சாராயம் குடித்து 2 பேர்பலியாகினர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச் சாராயம் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திஇந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் ஜி.பழனிச்சாமி தலைமையில் மக்கள்போராடிய பிறகு தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் விற்பனை தழைத்தோங்குகிறது என்பதற்கும், ஆளும்கட்சி, போலீஸ் பின்பலத்துடன் தான் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுகிறதுஎன்பதற்கும் இது எடுத்துக் காட்டு.
விஷச் சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றுகூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications