உயிரைக் குடிக்கும் எய்ட்ஸ் அபாயம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">எய்ட்ஸ், கொஞ்சம் கொஞ்சமாய் உயிரைக் குடிக்கும் நோய்.
இந்தியாவில் 3.6 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார் யூனிசெப் ஆலோசகர் டோரிஸ் டெக்ரூஸ்.
இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டு மக்கள் அதிகஅளவு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று யூனிசெப் செய்திகள்உறுதிப்படுத்துகின்றன.
ஆனால் அதே சமயம் வடஇந்தியாவில் எய்ட்ஸ் நோய் பாதிப்பின் அளவு மிகக் குறைவே.
ஏனெனில் அந்தந்த மாநிலங்களில் நடக்கும் பிரச்சனைகள், வறுமைநிலை, சாப்பாட்டுப் பிரச்சனை என்று எத்தனையோ போராட்டங்கள் இருக்கும்நிலையில் அவர்களால் பாலியல் ரீதியான உணர்வுகளுக்கு இடம் கொடுக்க முடிவதில்லை. நேரமும் இல்லை.
இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 25 வயதிற்குட்பட்டவர்கள். அவர்களில் 25 சதவீதம் பெண்கள்.
இவற்றில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மணிப்பூர், மிசோரம் பகுதிகளில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 1 சதவீதம் பேர்கர்ப்பிணிப்பெண்கள் என்ற செய்தி நெஞ்சை உறைய வைக்கும். ஆனால் இதுதான் உண்மை.
ஆனால் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்தியா முழுவதும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த யூனிசெப் திட்டமிட்டுள்ளது.