தமிழகத்தில் இன்று
மனைவியைப் பிரிந்தவர் கருணாநிதி வீடு முன் தற்கொலைக்கு முயற்சி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
பிரிந்து போன மனைவியைச் சேர்த்து வைக்கக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி வீடு முன்பு தற்கொலை செய்ய முயன்ற 55 வயது நபரை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வருபவர் நடராஜன் (55 வயது). இவரது மனைவி சமீபத்தில் இவரை விட்டுப் பிரிந்துபோனார். இதனால் மனம் உடைந்த நடராஜன், முதல்வர் குறை கேட்கும் நிகழ்ச்சியின்போது, மனைவியை சேர்த்து வைக்குமாறு கோரி மனுக்கொடுத்திருந்தார். ஆளுநரிடமும் இதுபோல ஒரு மனுவை அவர் கொடுத்தார்.
இரு தரப்பிலிருந்தும் பதில் ஏதும் வராததால், மனம் உடைந்த நிலையில் அவர் இருந்தார். இந்த நிலையில் புதன்கிழமை காலை சென்னை கோபாலபுரத்தில்உள்ள முதல்வர் இல்லம் நோக்கிச் சென்றார். வீடு முன்பு அவர் தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து முதல்வர் வீட்டுக்குக் காவல் இருந்தபோலீஸார் விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர்.
இந்த நபர் கூறுவது உண்மைதானா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications