"இரட்-டை சி-லு-வை-கள் சு-மக்--கும் பெண்-க-ள்"- நிர்-ம-லா சு-ரேஷ்
இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் 2 மீனவர்கள் காயம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராமேஸ்வரம்:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 தமிழக மீனவர்கள்காயமடைந்தனர்.
இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரும், சென்னையைச் சேர்ந்த பாபு (35), சேசு, அரக்காசு, சூசைமரியம்ஆகியோர் ராமேஸ்வரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நான்கு பேரும் தலைமன்னாருக்கும், கச்சத்தீவுக்கும் இடையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது சிங்களக் கடற்படையினர் திடீரென்று எந்திரத் துப்பாக்கியால் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். சராமரியாக குண்டுகள் பாய்ந்ததில் படகு துளைக்கப்பட்டது.
அதில் இருந்த மீனவர்கள் படகுக்குள் படுத்து உயிர்பிழைக்க முயன்றனர். அவர்களில் பாபு என்ற மீனவருக்குவலது கணுக்காலில் குண்டு பாய்ந்தது. அரக்காசு குண்டுத்துகள்கள் பாய்ந்ததில் படுகாயமடைந்தார்.
இவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications