For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
முன்னை இவன் செய்த தீதெலாம் - அவர்
முற்றும் மறந்தவ ராகியே - தன்னைத்
தின்ன வருமொர் தவளையைக் - கண்டு
சிங்கஞ் சிரித்தருள் செய்தல்போல் - துணை
யென்ன இவனை மதிப்பவும்; - அவர்
ஏற்றத்தைக் கண்டும் அஞ்சாமலே - (நின்றன்
சின்ன மதியினை என்சொல்வேன்) - பகை
செய்திட எண்ணிப் பிதற்றினாய். (75)
ஒப்பில் வலிமை யுடையதாகந் - துணை
யோடு பகைத்தல் உறுதியோ? - நம்மைத்
தப்பிழைத் தாரந்த வேள்வியில் - என்று
சாலம் எவரிடஞ் செய்கிறாய் - மயல்
அப்பி விழிதடு மாறியே- இவன்
அங்கு மிங்கும்விழுந் தாடல் கண்டு - அந்தத்
துப்பிதழ் மைத்துளி தான்சிரித் - திடில்
தோஷ மிதில்மிக வந்ததோ? (76)
(தொடரும்...)
Story first published: Thursday, July 20, 2000, 5:30 [IST]