தமிழகத்தில் இன்று
ரத்தத்திற்கே விற்பனை வரியா? டெல்லி அரசு மறுப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
ரத்தம் மற்றும் ரத்தம் தொடர்பான மருந்து பொருட்களுக்கு விற்பனைவரி விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை டெல்லி நிதியமைச்சர் மகேந்திர சிங்சாத்தி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சில பத்திரிக்கைகளில் ரத்தத்திற்கும், ரத்தம் தொடர்பான மருந்துப் பொருட்களுக்கும் விற்பனை வரி விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் தவறான செய்தி.
ரத்தத்திற்கும், ரத்தம் தொடர்பான மருந்து பொருட்களுக்கும் எந்த வித விற்பனை வரியும் கிடையாது.
47 உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் கருவிகள் ஆகியவற்றிற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
ஆனால் ரத்தம் தொடர்பான மருந்துப் பொருட்களுக்கு வரிவிதிப்பதாக சில பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஹூமோஃபிலியா பெடரேஷன் உண்மையில் ரத்தம் தொடர்பான மருந்து பொருட்களுக்கு விற்பனை வரி இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்துவிளக்கம் கேட்டு எங்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது.
அவர்களது சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் பொருட்டு அப்படி விற்பனை வரி எதுவும் இல்லை என்று டெல்லி அரசு தெளிவுபடுத்தியது என்று கூறினார்.
யு.என்.ஐ.