தமிழகத்தில் இன்று
ஜெ.க்கு 3 லட்சம் டாலர் அ-னுப்-பி-யவர் எம்.ஏ.எம். ராம--சா-மி-
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலிருந்துதான்ஜெயலலிதாவுக்கு ரூ3 லட்சம் டாலர் பணம் அனுப்பப்பட்டதாக சிபிஐ விசாரணையில்தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் ரூ 3 லட்சம் டாலர் பணம் எப்படி வந்தது என்பதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தொழிலதிபர் ராமசாமியின் வங்கிக் கணக்கிலிருந்து இப்பணம்அனுப்பப்பட்டதாக சிபிஐ க்குத் தகவல் கிடைத்தது.
பிரிட்டனின் சானல் தீவுகளில் கிரின்ட்லேஸ் வங்கியிலிருந்து ஜெயலலிதாவுக்கு பணம்அனுப்பப்பட்டதாகவும் அவர்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிபிஐ சென்னையிலுள்ள எம்ஏஎம் ராமசாமி வீட்டில் சோதனைநடத்தினார்கள். அப்போது ராமசாமி தனக்கு வெளிநாட்டில் வங்கியில் பணம் ஏதும்இல்லை என்று மறுத்தார்.
சிபிஐக்கு வெளிநாட்டு வங்கி அனுப்பியுள்ள கடிதத்தில் ராமசாமி, செட்டிநாடு ஹவுஸ்,சென்னை என்ற முகவரியில் தங்கள் வங்கியில் கணக்கு இருப்பதாகவும், இதுகுறித்துமேலும் சில தகவல்களைச் சேகரித்துத் தரும்படியும் அவர்கள் சிபிஐ க்குத் தகவல்அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து சிபிஐ விசாரணையில் ராமசாமி என்ற பெயரிலிருந்து ரூ 3 லட்சம் பணம்கேடிபி.மேனன் என்ற பெயருக்கு மாற்றப்பட்டு அந்தப்பணம் ஜெயலலிதாவுக்குஅனுப்பப்பட்டுள்ளது என்று போலீசார் கண்டுபிடித்தனர்.
இதில் 6 ல் 5 பங்கு பணம் ராமசாமியுடையது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.ராமசாமியின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாற்றப்பட்ட நாளில் அந்த வங்கியில்ராமசாமியின் வங்கிக் கணக்கு முடிக்கப்பட்டு விட்டது.
அவர் எந்தத் தேதியில் வங்கிக் கணக்கைத் தொடங்கினார் என்பது குறித்து சிபிஐ விசாரித்துவருகின்றார்கள்.












Click it and Unblock the Notifications