தமிழகத்தில் இன்று
கோவை ஜெயிலில் துண்-டா-கிக் கிடந்-த "மனித கால்"
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை ஜெயிலில் கிடந்த மனிதக் கால் கண்டுபிடிக்கப்பட்டது. கோவையில் டாக்டர் நஞ்சப்பா மெயின்ரோட்டில் மத்தியச்சிறை உள்ளது.
கோவையில் நடந்த தொடர்குண்டுவெடிப்பு, கொலை, கொள்ளை ஆகிய பல குற்றங்களில் ஈடுபட்ட பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையொட்டி ஜெயில் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ஜெயில் வளாகத்துக்கு மேலே வானத்தில் 100 க்கும் மேற்பட்ட கழுகுகள், வட்டமிட்டபடி பறந்து கொண்டே இருந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயில் ஊழியர்கள் வளாகத்தில் கழுகு ஏதாவது இறந்து கிடக்கிறதா என்று பார்த்தனர்.
அப்போது பயிற்சி மைதானத்தில் அழுகிய நிலையில் மனிதக் கால்துண்டு ஒன்று கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டனர்.
இதனால் ஜெயிலுக்குள் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கால் எப்படி பயிற்சி மைதானத்துக்குள் வந்தது? இது ஆண் காலா? பெண் காலா? சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பிணத்தின் காலை பருந்துகள் எடுத்துவந்து ஜெயில் பயிற்சி மைதானத்தில் போட்டனவா ? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.