தமிழகத்தில் இன்று
கணவரிடம் வரதட்சணை கேட்ட புதுமைப் பெண்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
ரூ. 20,000 வரதட்சணை கேட்டு மனைவி பிரிந்து சென்று விட்டதாக மதுரையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
தனியார் பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராக இருப்பவர் தவச்செல்வம். இவரது மனைவி மணிமாலா. நாதஸ்வரக் கலைஞர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களதுதிருமணம் நடந்தது.
இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு மணிமாலா, தனது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டார். மனைவியை திரும்ப அழைப்பதற்காக தவச்செல்வம்மாமனார் வீட்டுக்குச் சென்று கூப்பிட்டுள்ளார். ஆனால் மணிமாலா வித்தியாசமான நிபந்தனையைப் போட்டுள்ளார்.
ரூ. 20,000 வரதட்சணை பணம், 3 பவுன் தங்க நகை கொடுக்க வேண்டும். தந்தை வீட்டில்தான் தங்க வேண்டும் என்று அவர் கூறவே திகைத்துப் போனார்தவச்செல்வம்.
மதுரை போலீஸ் கமிஷனர் நடத்தும் குறை தீர்ப்பு முகாமிற்குச் சென்றார். அங்கு தனது சோகக் கதையைக் கூறி புகார் கொடுத்தார். உரிய நடவடிக்கைஎடுப்போம், கவலைப்படாதீர்கள் என்று போலீஸ் தரப்பில் தவச்செல்வத்திற்கு உறுதி கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.