தமிழகத்தில் இன்று
"ஒத்த ரூபா" சம்பளம் ஏன்? நீதிமன்றத்தில் ஜெயலலிதா விளக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழக முதல்வராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது ஏன் என்பதற்கு 3-வது சிறப்புநீதிமன்றத்தில் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் விசாரணைக்காக 3-வது சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா வெள்ளிக்கிழமைஆஜரானார். அவரிடம் நீதிபதி குறுக்கு விசாரணை நடத்தினார்.
இவ் வழக்கில் சாட்சியம் அளித்த எதேந்திரபாபு என்பவர், முதல்வராக இருந்த 27 மாதமும் நீங்கள் மாதச்சம்பளமாக ஒரு ரூபாய்பெற்றுக் கொண்டதாகக் கூறினார். அது பற்றி விளக்கமளியுங்கள் என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு ஜெயலலிதா அளித்த பதில்:
நான் முதல்வராகப் பதவியில் இருந்தபோது முதல் மாதச் சம்பளமாக பெருந்தொகைக்கு செக் எழுதிக் கொண்டுவந்து கொடுத்தனர். எனக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. அவற்றின் மூலம் எனக்கு நிறைய வருமானம்வருகிறது. ஆகவே, எனக்குச் சம்பளம் தேவையில்லை என்று கூறினேன்.
ஆனால், பொது ஊழியராக இருப்பவர் சம்பளம் வாங்க வேண்டும் என்று தலைமைச் செயலரும், மற்றஅதிகாரிகளும் எடுத்துக் கூறினர். இதையடுத்து மாதம் எனக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் கொடுங்கள் என்றுகேட்டு வாங்கினேன் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications