தமிழகத்தில் இன்று
4 பெண் பிணைக் கைதிகளை விடுவித்தனர் புரட்சியாளர்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:
பிஜியில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள அமைச்சர்களில் நான்கு பெண் அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டார்கள்.
முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதி கொய்லா மாரா, முன்னாள் பெண்கள் நலத்துறை அமைச்சர் லேவினியா பதாரத், துணை விவசாயத்துறைஅமைச்சர் மேரிடா ரிகாமோட்டோ, அமைச்சர் அகானிசி கோரோடாமனா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் கொய்லா மாரா, பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிபர் மாராவின் மகள்.
விடுவிக்கப்பட்ட பெண் அமைச்சர்கள் அனைவரும் செஞ்சிலுவைச்சங்கத்தில் இரண்டு மணிநேரம் சிகிச்சை எடுத்துக்கொண்ட பின் விடுவிக்கப்பட்டனர்.
பிரதமர் மகேந்திர செளத்திரியின் மகன், செயலாளர் ராஜேந்திரா உள்பட 27 பேர் இன்னும் பிணைக் கைதிகளாக உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதி காலை 2 மணிக்கு பிணைக்கைதிகள் 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டதும் அவர்கள் அனைவரும்பாராளுமன்ற வளாகத்திலுள்ள முன்னாள் அமைச்சர் ஆதியின் உறவினர் வீட்டுக்குச் சென்றனர். அங்கே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிற பிணைக்கைதிகளை விடுவிப்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.