பாகிஸ்தானுடன் 3-வது டெஸ்ட்: ஆல் ரவுண்டர் தர்மசேனாவுக்கு இலங்கை அழைப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்டில் விளையாட ஆல் ரவுண்டர் குமரதர்மசேனாவுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வரும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே 3-வது மற்றும் இறுதிகிரிக்கெட் டெஸ்ட் போட்டி கண்டியில் புதன்கிழமை துவங்குகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்த இருடெஸ்டுகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந் நிலையில், 3-வது டெஸ்டுக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் குமர தர்மசேனா சேர்க்கப்பட்டுள்ளார்.அவரது பந்து வீச்சு முறையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடஅவர் தடை விதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள தர்மசேனா 660 ரன்கள் எடுத்துள்ளார். 50 விக்கெட்டுகளைவீழ்த்தியுள்ளார். இரண்டாவது டெஸ்டில் விளையாடிய ரவீந்திர புஷ்பகுமார, ரங்கன ரீரத் இருவரும் 3-வதுடெஸ்டுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது டெஸ்டில் விளையாடாத வேகப் பந்து வீச்சாளர்நுவன் சோய்ஸா, 3-வது டெஸ்டுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்:
ஜெயசூர்யா, அட்டபட்டு, ஆர்னால்டு, அரவிந்த டிசில்வா, ஜெயவர்த்தனே, வாஸ், சோய்ஸா, முரளிதரன்,தர்மசேனா, சந்தனா, பெர்னான்டோ, கலுவிதரன, சங்காக்கரா, குணவர்த்தனா.












Click it and Unblock the Notifications