தமிழகத்தில் இன்று
போ-தை ம-ரு-ந்-து -க-டத்-தல் -ம-ய-மா-கும் இந்--தியா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
போதைப் பொருட்களைக் கடத்தும் வர்த்தக மையமாக இந்-தி-யா பயன்படுத்தப்பட்டு வருகிறது என கோவைபோலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி இன்று நடந்த விழாவில் ராதாகிருஷ்ணன் பேசியதாவது;
போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்தல் ஆகியவை உலகளவில் உள்ள ஒரு பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. உலகிலேயே இரண்டாவது மிகப் பெரும் வர்த்தகத்தில் ஒன்றாகப் போதைப் பொருள் கடத்தல் நடந்துவருகிறது. ஆண்டுக்கு 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இந்த வர்த்தகம் -நடக்கிறது. உலக வர்த்தகத்தில்-முதலிடம் வகிப்பது ஆயுத வர்த்தகம்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்தியா வழியாக ஓபியம் போன்ற போதைப் பொருட்கள் அதிக அளவில்கடத்தப்படுகிறது. இந்தியாவிற்கு மேல் பகுதியில் உள்ள "-முக்கோண -நாடுகளிலிருந்து", இந்தியா வழியாக,குறிப்பாக தூத்துக்குடி வழியாக படகுகள் உதவியுடன் இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்த அரசு பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்-றார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.