For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பிஜி: புரட்சிக்காரர்கள் சரணடைய ராணுவ அரசு 24 மணி நேரம் கெடு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:

ஆயுதங்களை ஒப்படைத்து பிடித்து வைத்துள்ள பிரதமர் உள்பட 27 பிணைக்கைதிகளையும் ஒப்படைக்க புரட்சிக்காரர்களுக்கு பிஜி ராணுவ அரசு 24 மணி நேரம்கெடு விதித்துள்ளது.

பிஜி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் புரட்சிப் படையினர்கடந்த மே 19-ம் தேதி பிஜி நாடாளமன்றத்துக்குள் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர். பிரதமர் மகேந்திர செளத்ரி, அமைச்சர்கள் உள்பட பலரை அவர்கள்பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.

அதன பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டு, பிஜியில் ராணுவத்தின் கையில் ஆட்சிஒப்படைக்கப்பட்டுள்ளது. புரட்சிக்காரர்களுடன் ராணுவம் பேச்சு நடத்தியதன்அடிப்படையில் பிரதமர் உள்பட 27 பேர் மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சு வார்த்தைதோல்வியடைந்துவிட்டது. பிஜியில் பிஜியைச் சேர்ந்தவர் ஒருவர் தலைமையில் ஆட்சிஏற்படும் வரை பிணைக் கைதிகளை விடுவிக்கமாட்டோம் என்று புரட்சிக்காரர்கள்கூறிவிட்டனர்.

இந் நிலையில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு தனது ஆட்சியைத் தொடர விருப்பதாகராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, புரட்சிக்காரர்கள் தாங்கள்பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவித்து ஆயுதங்களைஒப்படைக்க 24 மணி நேரம் கெடு வழங்கப்பட்டுள்ளதாக ராணுவம்செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்தைப் புரட்சிக்காரர்கள் பயனபடுத்தி தங்களதுநிலையை மறு ஆய்வு செய்யவேண்டும். இப் பிரச்சினைக்குத் தீர்வு, புரட்சிக்காரர்கள்அடுத்து எடுக்கும் முடிவில் தான் உள்ளது.

புரட்சிக்காரர்கள் எதிர் முடிவு எடுக்கும் பட்சத்தில், பிஜியில் அடுத்து ஏற்படும் அரசில்அவர்களுக்கு இடமில்லை. மேலும், இப் பிரச்சினைக்கு முடிவு காண ராணுவ அரசேவேறு முடிவு மேற்கொள்ளும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிலிபோதராகினிகினி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X