தமிழகத்தில் இன்று
கிர் காட்டிலிருந்து தப்பி வந்த சிங்கம் தாக்கி 6 பேர் காயம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராஜ்கோட்:
கிர் காட்டிலிருந்து தப்பி வந்த சிங்கம் தாக்கி 6 பேர் காயமடைந்தனர். குஜராத் மாநிலம் ஆம்ரேலி மாவட்டத்தில்உள்ள நானுடி கிராமத்தில் திங்கள்கிழமை இச் சம்பவம் நடந்தது.
ஆசிய சிங்கங்களின் மிகப் பெரிய புகலிடமாக கிர் காடு உள்ளது. இக் காட்டில் வசிக்கும் சிங்கங்கள் அவ்வப்போதுஅருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து கால்நடைகளைக் கொன்று தின்றுவிட்டுச் செல்லும்.
அதுபோல் காட்டிலிருந்து வெளியே வந்த சிங்கம் ஒன்று, காட்டுக்கு அருகில் உள்ள கல் குவாரியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளியைத் தாக்கியது. பின்னர் அருகில் உள்ள கிராமத்துக்குள் புகுந்த அச் சிங்கம் பெண்பெண் உள்பட மேலும் 5 பேரைத் தாக்கிவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டது.
காயமடைந்த 6 பேரும் தற்போது ஆம்ரேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருடையநிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications