அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
கலவரத்தை ஒடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> சென்னை:
தமிழகத்தில் சமீப காலத்தில் கலவரம் ஏற்பட்ட கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் பகுதிகளைச் சேர்ந்த உயர்போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கலவரத்தை ஒடுக்க தக்க முயற்சிகளை மேற்கொள்ளத் தவறியதால் கடுமையான அரசியல் நிர்பந்தம் காரணமாகவேறு இடங்களுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தில் சமீபத்தில் தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 தலித்துகள் கொலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தை உள்ளடக்கிய கடலூர் மாவட்ட கண்காணிப்பாளராகஇருந்த அபய்குமார் சிங் அங்கிருந்து மாற்றப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட கண்காணிப்பாளராகநியமிக்கப்பட்டுள்ளர்.
கோவை சட்டம் - ஒழுங்கு பிரிவு துணை கமிஷனராக இருந்த டேவிட் தேவசகாயம், கடலூர் மாவட்டகண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகாசி கூடுதல் கண்காணிப்பாளராக உள்ள ஏ. சங்கர், கண்காணிப்பாளராகப் பதவி உயர்த்தப்பட்டு கோவைசட்டம் - ஒழுங்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்துப் பிரிவு இணை கமிஷனராக இருந்த ஆர். சேகர், விழுப்புரம் டிஐஜியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
அடிக்கடி கலவரம் ஏற்படும் பகுதியான பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளராக அரியலூர் சிறப்பு அதிகாரிஅருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications