தமிழகத்தில் இன்று
ஜம்மு-காஷ்மீர் சுயாட்சி தீர்மானத்தால் ஆபத்தில்லை: வாஜ்பாய்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">போர்ச்சுகலிலிருந்து விமானத்தில் திரும்புகையில்:
ஜம்மு-காஷ் மீர் மாநில சட்டசபையில், சுயாட்சி கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்குறித்து அஞ்சத் தேவையில்லை. இதுகுறித்து மத்திய அமைச்சரவை பரிசீலித்து முடிவுஎடுக்கும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
இத்தாலி, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டுவெள்ளிக்கிழமை பிரதமர் வாஜ்பாய் இந்தியா திரும்பினார். வழியில், விமானத்தில்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுயாட்சி தொடர்பாக சட்டசபையில்விவாதிக்கப்படும் என்று மட்டுமே, அம்மாநில முதல்வர் பரூக் அப்துல்லா, என்னிடம்உறுதி கூறியிருந்தார். ஆனால் தற்போது, தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுயாட்சி தீர்மானம் குறித்து அரசு பரிசீலிக்கும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு உரியநடவடிக்கை எடுக்கப்படும்.
சுயாட்சி தீர்மானம் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும் என்று கூற முடியாது. இந்தப்பிரச்சினைக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சுயாட்சி தீர்மானம், அரசியல்சட்டத்திற்கு உட்பட்டே நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் கோருவதும் கூடஅரசியல் சட்டத்திற்கு உட்பட்டே அமைந்துள்ளது.
சுயாட்சி தீர்மானத்தால் நாட்டின் பாதுகாப்பு குறித்து அஞ்சத் தேவையில்லை. நான்அப்படி நினைக்கவில்லை. எந்தவித மிரட்டலையும் சந்திக்க நாடு தயாராக உள்ளதுஎன்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications