தமிழகத்தில் இன்று
ஆர்.பி.எஃப். நிறுவனத்தில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தக் கோரி நடிகர் சரத்குமார், பாக்யராஜ், ராம்கி,பாண்டியராஜன் உள்பட 18 நடிகர்களுக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை பெனிபிட் பன்ட் நிதிநிறுவனம் தனது முதலீட்டாளர்களை மோசடி செய்ததையடுத்துமத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கம்பெனி லா போர்டு, இந்நிறுவனத்தை எடுத்துக் கொண்டு புதியஇயக்குநர்களை நியமித்தது.
இதற்கிடையில் ஆர்பிஎஃப் முதலீட்டாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளனர். அந்த மனுவில் கடன் வாங்கிய பெரும் பணக்காரர்கள் கடனைத் திருப்பி தர மறுக்கின்றனர்.அவர்களிடமிருந்து விரைவாகக் கடனை வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி தினகரன் நிதிநிறுவனத்தில் கடன்வாங்கியவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவையடுத்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் ஆர்.பி.எஃப்.நிறுவனத்தில் கடன் வாங்கிக் கொண்டு திருப்பிச் செலுத்தாமல் உள்ள நடிகர் சிவாஜி கணேசன், பாக்யராஜ்,பாண்டியராஜன், ராம்கி உள்பட 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நோட்டீசைப் பெற்ற நடிகர்கள் வியாழக்கிழமை தாங்கள் கடனை உடனே அடைத்து விடுவதாக பொருளாதாரகுற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவித்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications