தமிழகத்தில் இன்று
சியோராலியோனில் 21 இந்திய அமைதிப்படை வீரர்கள் விடுதலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
சியோரா லியோனில் தீவிரவாதிகள் பிடியில் இருந்த ஐ.நா. அமைதிகாக்கும் படையில் இடம் பெற்றிருந்த 21 இந்திய வீரர்கள் வெள்ளிக்கிழமைவிடுவிக்கப்பட்டனர்.
சியோரா லியோனில் புரட்சிகர ஐக்கிய முன்னணி தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஐ.நா. அமைதி காக்கும் படை ஈடுபட்டு வருகிறது. இதில் இந்தியவீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 500-க்கும் மேற்பட்ட ஐ.நாத அமைதி காக்கும் படை வீரர்களை தீவிரவாதிகள் பின்ை கைதிகளாகபிடித்து வைத்துள்ளனர்.
வீரர்களை விடுவிப்பதற்காக தீவிரவாதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் 21 இந்திய வீரர்களை வெள்ளிக்கிழமைதீவிரவாதிகள் விடுவித்தனர். லைபிரியா அதிபர் சார்லஸ் டெய்லரின் சமரச முயற்சியின் பேரில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட வீரர்கள்தலைநகர் ப்ரீடவுனுக்குச் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னன் கூறுகையில், லைபிரியா அதிபரின் முயற்சியால் 21 இந்திய அமைதிப்படையினர் விடுவிக்கப்பட்டது குறித்துமிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications