For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
மாபெரும் பேரணியுடன் தொடங்கியது மதிமுக மாநாடு
ஈரோடு:
மாபெரும் பேரணியுடன் மதிமுகவின் 2 நாள் தமிழர் எழுச்சி மாநாடு ஈரோட்டில்சனிக்கிழமை மாலை துவங்கியது.
பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக இம் மாநாடு நடத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும்,பேரணியில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ, தமிழ்ஈழத்துக்கு ஆதரவாகவோ கோஷம் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவப் படத்தைப்பலர் பிடித்து வந்தனர். பேரணியில் தமிழகத்துக்கு ஆதரவாகவும், பொருளாதாரவளர்ச்சி காண தமிழகத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவேண்டும் என்றும்கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பேரணி சென்ற பாதை முழுவதும் ஏராளமான வைகோ கட் அவுட்டுகள்வைக்கப்பட்டிருந்தன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, July 1, 2000, 5:30 [IST]