தமிழகத்தில் இன்று
சென்னை:
நடிகர் விவேக் நடித்த படப்பிடிப்பின் போது கலாட்டா செய்த ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.இதையடுத்து படப்பிடிப்பு ரத்தானது.
நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்சனிக்கிழமை நடைபெற்றது.
மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடை ஒன்றில் விவேக் காய்கறிகள் வாங்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.மார்க்கெட் பகுதி என்பதாலும், சனிக்கிழமை என்பதாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
காய்கறிகளை வாங்க வந்தவர்கள் எல்லாம் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில்சினிமா ஆர்வமிக்க ரசிகர்கள் விவேக்கிடம் ஆட்டோகிராப் வாங்க முயன்றனர். இன்னும் சிலர் விவேக்கிடம் பேசவேண்டும் என்று நெருங்கினர். கூட்-டம் -கட்--டுக்-க-டங்-கா-மல் போன-து.
முண்டியடித்துக் கொண்டு விவேக் மேல் விழுந்த ரசிகர்களை, விவேக் தள்ளி விட்டார். அதனால் ஆவேசமடைந்தரசிகர்கள் கலாட்டா செய்தனர்.
உடனே படப்பிடிப்புக் குழுவினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ரசிகர்களைசமாதானப்படுத்தினர். ஆனாலும், விவேக்கை எதிர்த்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
நிலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டியடித்தனர். திடீர் ரகளை காரணமாகபடப்பிடிப்பு பாதியில் ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications