தமிழகத்தில் இன்று
மேற்கு ஆசிய நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா திட்டம்
துபாய்:
மேற்கு ஆசிய நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க தீவிர முயற்சிகளைஇந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்திய தேயிலை சங்கத்தைச் சேர்ந்த உயர்மட்டக் குழு சமீபத்தில் ஈரான், ஜோர்டான்,சிரியா, ஐ.அ.கு. உள்ளிட்ட பல மேற்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்மேற்கொண்டது.
அப்போது அங்கு நடத்திய ஆய்வில் மேற்கு ஆசிய நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதியைஇன்னும் அதிகரிக்க தக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம்உணரப்பட்டது.
இது தொடர்பாக, இந்திய தேயிலை சங்கத்தின் கூடுதல் செயலர் மோனோஜித் தாஸ்குப்தாகூறியதாவது:
மேற்கு ஆசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் இலங்கை, கென்யாஆகிய நாடுகளில் இருந்தும் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின்தேயிலை ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கவேண்டுமானால் பல சீரிய திட்டங்களைத்தீட்டவேண்டும்.
மேற்கு ஆசிய நாடுகளில் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் பலவற்றிலும் இந்தியதேயிலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இலங்கை, கென்யா ஆகிய நாடுகளின்போட்டியைச் சமாளித்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு அதிக அளவு தேயிலை ஏற்றுமதிசெய்யும் நாடுகளில் இந்தியா மீண்டும் முதலிடத்துக்கு வரும் என்றார் தாஸ்குப்தா.
யு.என்.ஐ.