For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
இரு இந்தியர்களுக்கு ஜப்பானின் உயரிய விருது
டெல்லி:
ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பணியாற்றியதற்காக இரு இந்தியர்களுக்கு, ஜப்பான் நாடு தனதுநாட்டின் மிக உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்ச கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) அமைப்பைச் சார்ந்த விஞ்ஞானி அசோக் ஜெயின், ஜப்பானிய கலாசாரத்துக்கான இந்தியகவுன்சில் அமைப்பின் தலைவர் ராஜ் கே. புத்திராஜா இருவருக்கும் இவ் விருது வழங்கப்பட்டது.
ஜப்பான் அரசர் அகிஹிடோ, பிரதமர் யோஷிரோ மோரி ஆகியோர் கையெழுத்திட்ட பாராட்டுப் பத்திரங்களை அசோக் ஜெயினுக்கும், புத்திராஜாவுக்கும்இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரிஷி ஹிரோபயாஷி திங்கள்கிழமை வழங்கினார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, July 3, 2000, 5:30 [IST]