தமிழகத்தில் இன்று
கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை - பெட்-ரோ-லி-ய அமைச்சர் எச்சரிக்கை
டெல்லி:
பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கும்படி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய பெட்ரோலியம்மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ராம் நாயக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சர்கள்மற்றும் செயலர்கள் மாநாட்டை டெல்லியில் அவர் செவ்வாய்க்கிழமை துவக்கிவைத்துப் பேசியதாவது:
பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்படம் செய்பவர்கள் மீது மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு ஒழுங்காகவும், சரியான அளவிலும் மண்ணெண்ணெய்விநியோகிக்கப்படுகிறதா என்பதையும் அந்த அரசுகள் கண்காணிக்கவேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் நாப்தாவை பதுக்கி வைப்பது,விற்பது, வாகனங்களில் பயன்படுத்துவது ஆகியவை தடை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றார் ராம் நாயக்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications