தமிழகத்தில் இன்று
ரூ.70 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன ஊழியர்கள் கைது
திருச்சி:
நிதி நிறுவனம் நடத்தி பொது மக்களிடமிருந்து ரூ.70 லட்சம் வசூலித்து அதைத்திருப்பித் தராமல் மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றி போலீஸார் கூறப்படுவதாவது:
திருச்சி அருகே உள்ள காட்டுப்புத்தூர் என்ற ஊரில் 30 பேர் கூட்டாகச் சேர்ந்த நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாகக்கூறியதை அடுத்து அந் நிறுவனத்தில் ஏராளமான மக்கள் லட்சக்கணக்கில் பணம்செலுத்தினர்.
ஆரம்பகாலத்தில் முதலீடு செய்த பணத்துக்கு வட்டி கொடுத்த அவர்கள், பின்னர் வட்டிகொடுக்காமல் ஏமாற்றினர். அது தவிர, முதிர்ச்சி அடைந்த முதலீட்டுத் தொகையையும்திருப்பித் தராமல் நிதி நிறுவனத்தின் ஏமாற்றியுள்ளனர்.
இதையடுத்து அந் நிறுவனத்தில் ரூ. 51 ஆயிரம் முதலீடு செய்திருந்த வழக்கறிஞர்ஒருவர் போலீஸில் புகார் கொடுத்தார். இப் புகாரின் பேரில் நிதி நிறுவனத்தின் முக்கியபங்குதாரர் செல்வராஜ் உள்பட 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications