பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
கம்ப்யூட்டர்மயமாகிறது கோவை டி.ஆர்.ஓ. அலுவலகம்
கோவை:
தமிழகத்தில் முதல் கட்டமாக 50 வட்டாட்சி (டி.ஆர்.ஓ.) அலுவலகங்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும் என தமிழக வருவாய்த் துறை அமைச்சர் நாஞ்சில்மனோகரன் கோவையில் தெரிவித்தார்
கோவையில் செவ்வாய்க்கிழமை நடந்த பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் மாநில வருவாய்த் துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் பேசியதாவது:
தமிழகத்தில் முதல் கட்டமாக 50 வட்டாட்சியர் அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகிறது. இந்த அலுவலகங்களில் உள்ள பட்டாக்கள்அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு மற்றும் பொள்ளாச்சி தாசில்தார் அலுவலகங்களில் கம்ப்யூட்டரில் பட்டாக்களைப் பதிவு செய்யும் பணிவிரைவில் துவங்க உள்ளது. இதனால், எளிதாக நில வளங்களை ஆராய்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க முடியும்.
தமிழகத்தில் 12 ஆயிரத்து 506 கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகத்துடன் கூடிய வீடு கட்டித் தரும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.இத்திட்டத்தில், கடலோர கிராமங்கள், மலைப் பகுதிக் கிரமாங்களில் வசிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் விரைவில்வீடு கட்டித் தரப்படும் என்று அவர் கூறினார்.