முதல் உள்ளரங்கு கிரிக்கெட் போட்டி: ஆஸி அணியில் மீண்டும் பான்டிங்
மெல்பர்ன்:
ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் நடைபெற உள்ள உலகின் முதல் உள்அரங்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்குஎதிராக விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விலகி இருந்த ரிக்கி பான்டிங், ஜஸோன் கில்லெஸ்பி ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
மெல்பர்னில் உள்ள கலோனியல் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 16, 18, 20 தேதிகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. உலகின் முதல்உள்அரங்கு கிரிக்கெட் போட்டிகளாக இவை நடைபெற உள்ளன.
கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரில் பான்டிங் காயமடைந்தார். கடந்த செப்டரில் நடந்த கிரிக்கெட் போட்டித்தொடரில் கில்லெஸ்பி காயமடைந்தார். தற்போது இருவரும் குணமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேத்யூ ஹைடனுக்குப் பதிலாக பான்டிங்கும், காயமடைந்துள்ள டேமியன் பிளெமிங்குக்குப் பதிலாக கில்லெஸ்பியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விவரம்:
ஸ்டீவ் வாவ், மார்க் வாவ், ஷேன் வார்னே, மேக்கேல் பேவன், ஆடம் கில்கிறைஸ்ட், ஜஸோன் கில்லெஸ்பி, இயான் ஹார்வி, பிரெட் லீ, ஷேன் லீ,டேமியன் மார்ட்டின், கிளென் மெக்ரா, ரிக்கி பான்டிங், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ்.