பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
சேலம் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
கோவை:
சேலம் சிறையில் தங்களது 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கைதிகள் திடீர்உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் சிறையில் திங்கள் கிழமை இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணைசூப்பரிண்டெண்ட் முனிவேலு கைதிகளிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, 5 தீவிரவாதிகள் உட்பட 15 கைதிகள் சிறையில் வசதி செய்து தரக் கோரி 15கோரிக்கைகளை வைத்தனர். ஆனால், இதனை முனிவேலு ஏற்கவில்லை. எனவே,கைதிகள் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில் 10 பேரை முனிவேலுசமாதனப்படுத்தினார்.
ஆனால், தீவிரவாதிகள் 5 பேர் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டனர்.இதனால் சிறையில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. சுமார் 200 கைதிகள் இவர்களுக்குஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலமையை அறிந்த சிறைத் துறை டி.ஐ.ஜி., எஸ்றா, கோவையிலிருந்து சேலம்விரைந்தார். அங்கு கைதிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்தார். இதன் பின்னர், ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications