யோகம் பயிலுவோம்
பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு வளர்ந்த நாடுகளே காரணம் - மாறன்
டெல்லி:
உலக நாடுகளிடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளே காரணம் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறைஅமைச்சர் முரசொலி மாறன் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த நாடுகள் எல்லாம் தங்களுக்கிடையே இன்டலெக்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ் (ஐ.பி.ஆர்.) என்ற பகுதியை உருவாக்கியுள்ளன.
இந்த இன்டலெக்சுவல் பிராப்பர்டி ஆர்கனைசேஷனின் உலக அமைப்பின் 3 நாள் கருத்தரங்கை அவர் டெல்லியில் துவக்கி வைத்துப் பேசியதாவது.
வளர்ச்சி அடைந்த நாடுகளின் ஐ.பி.ஆர். நடவடிக்கையால் அந் நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுஏற்பட்டுள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வைப் போக்க, உலக வர்த்தக அமைப்பை (டபிள்யூ.டி.ஓ.) வலுப்படுத்தும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு உலக சுகாதார அமைப்பின்திட்டங்களைச் செயல்படுத்த அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.
வளர்ந்த நாடுகள் எல்லாம் தாங்கள் பொருளாதாரம் மற்றும் தொழில் துறையில் முன்னேற்றம் காண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.ஆனால், அந்த முயற்சிகளையும், தொழில்நுட்பங்களையும் வளரும் நாடுகளுக்குத் தர அவை மறுத்து வருகின்றன.
இதனால் தொழில்துறையிலும், பொருளாதாரத் துறையிலும் முன்னேற்றம் காண மிகவும் சிரமப்படுகின்றன. வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்தநாடுகள் இடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் நிலையில், உலக வர்த்தக அமைப்பு தனது புதிய ஒப்பந்த முடிவுகளை அமல்படுத்தும்படி மூன்றாம் நாடுகளைநிர்பந்திக்கிறது.
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்த முடிவுகளில் பல ஓட்டைகளும், பாகுபாடுகளும் ஏராளமாக உள்ளன. மேலும், ஒரு நாட்டுக்கு மட்டுமே
உரிமையான ஒரு பொருளுக்கு வளர்ந்த நாடுகள் காப்புரிமை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீப காலத்தில் இந்தியாவுக்கு மட்டுமே உரிமையான மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இது பெரிய திருட்டு மட்டுமல்ல, ஏழை நாட்டின் அதிகாரப்பூர்வ உரிமையில் தலையிடுவது போல் ஆகும் என்றார் மாறன்.
யு.என்.ஐ.