தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
"வீடே பள்ளி ... பள்ளியே வீடு
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்ட பிரதமர்வாஜ்பாய், தனது பள்ளிப் பருவ நாட்களை நினைவு கூர்ந்தார்.
சென்னையில் பல்வேறு பள்ளிகளை நடத்தி வரும் ஜெயபால் கரோடியா பள்ளியின்விழாவில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், எனது பள்ளிப் பருவ நாட்கள் இப்போது நினைவுக்குவருகிறது. நான் பள்ளியில் படித்தபோது எனது தந்தை ஆசிரியராக இருந்தார். எனவேவீட்டுக்குத் திரும்பினாலும், எனக்கு பள்ளியில் இருப்பது போன்ற உணர்வுதான்இருக்கும்.
என்னைப் பொருத்தவரை, வீடே பள்ளியாகவும், பள்ளியே வீடாகவும் இருந்தது.
எனது தாயார் அதிகம் படிக்காதவர். இருப்பினும் அவரிடமிருந்துதான் நான் பலவிஷயங்களைக் கற்றுக் கொண்டேன். ஒரு தாயார் சிறந்தவராக இருந்தால் அவர்தான்ஒரு மனிதனுக்கு ஆசிரியன். அந்த வகையில் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டதைவிட தாயிடமிருந்து நான் கற்றுக் கொண்டதே அதிகம் என்றார் வாஜ்பாய்.