ஸ்பார்க்கஸன் செஸ் போட்டியில் பங்கேற்கிறார் ஆனந்த்
சென்னை:
ஜெர்மனியில் நடைபெற உள்ள 28-வது ஸ்பார்க்கஸன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொள்கிறார்.
இத் தகவலை, அவரது ஸ்பான்ஸர்கள் உறுதி செய்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள டார்ட்மண்ட் நகரில் ஜூலை 7-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இந்தசெஸ் போட்டி நடைபெறுகிறது.
1996-ம் ஆண்டு விளாடிமிர் கிராம்னிக்கும், இந்தியாவின் ஆனந்தும் இணைந்து பட்டம் வென்றனர். அப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள இருவரும்இந்த ஆண்டு விளையாடுகின்றனர்.
இவர்கள் தவி, பீட்டர் லீகோ, ஜெரோயின் பிக்ஸெட், காலிஃப்மென், விளாடிமிர் அகாபியன், மைக்கேல் ஆடம், எவ்கேனி பரீவ், ராபர்ட் ஹப்னர்ஆகியோரும் இப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
இப் போட்டியின் ஒரு பகுதியாக இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் அனைவரும் ஜூனியர் 6 என்ற கம்ப்யூட்டருடனும் விளையாடவேண்டும். முதன்முறையாகஇத்தகைய போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.