For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யோகம் பயிலுவோம்

By Staff
Google Oneindia Tamil News

தீர்ப்பை நெருங்குகிறது மாஜி அமைச்சரின் ஊழல் வழக்கு

சென்னை:

மாஜி அதிமுக அமைச்சர் பொன்னுசாமியின் ஊழல் வழக்கு தீர்ப்பை நெருங்குகிறது. இவ்வழக்கில் இறுதி வக்கீல்கள் வாதம் 24ம் ததி நடைபெறும்என்று தனி நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் வியாழக் கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் பேராசிரியர் மருங்காபுரி பொன்னுசாமி. பதவியில் இருந்த காலத்தில் வருமானத்தை மீறி 77லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளதாக இவர் மீதும், இவரது மனைவி பிரபாவதி, மகள் மாலா, தம்பிகள் வெங்கடேசன்,ராஜப்பா, ஆடிட்டர் ஜெயராம் ஆகிய 6 பேர் மீது தனி நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கை இரண்டாவது தனி நீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். இதுவரை 65 அரசு தரப்புச் சாட்சிகளும், 45 எதிர் தரப்பு சாட்சிகளும்விசாரிக்கப்பட்டுள்ளனர். வியாழக் கிழமையுடன் இரு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது என்றும், வருகிற 24ம் தேதி இறுதி வக்கீல்கள்வாதம் நடைபெறும் என்றும் நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இதையடுத்து 24ம் தேதி இவ்வழக்கில் இறுதி வக்கீல்கள் வாதம் நடைபெறும். அத்துடன் வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டு, விரைவில்தீர்ப்பு கூறப்படும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X