தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தீவிர கண்காணிப்பில் இந்திய-வங்கதேச எல்லை

அகர்தலா:

தெற்கு திரிபுராவில் தீவிரவாதிகள் ஊடுறுவலைத் தடுக்கும் விதத்தில், இந்தியா, வங்கதேச எல்லையில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.

மாவட்ட மாஜிஸ்திரேட் தஜீந்தர் சிங் இந்த தடையுத்தரவைப் பிறப்பித்தார். இந்தப் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவல், ஆயுதக் கடத்தல்,ஆகியவை அதிக அளவில் நடப்பதாக வந்த தகவலையடுத்து இங்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்தத்தடையுத்தரவு அமலில் இருக்கும்.

இருப்பினும், எல்லைப் பகுதியில் உள்ள பெலோனியா, சப்ரூம் ஆகிய நகரங்களில் இந்தத் தடையுத்தரவு அமலில் இருக்காது.

இதற்கிடையே, தலாய் மாவட்டத்தில், வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின் இறுதியில் திரிபுரா தேசிய விடுதலைப் படை என்றதீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இவரது தலைக்கு ரூ. 50,000 பரிசுஅறிவிக்கப்பட்டிருந்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+