For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

57 ... 357 ... 245 ...

சென்னை:

சென்னையில் கடந்த 57 நாட்களில் நடைபெற்ற திருட்டுக் குற்றங்களின்எண்ணிக்கை 357. அவை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் 245பேர் கைது செய்யப்பட்டு விட்டனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் காளிமுத்து தந்த புள்ளி விவரங்கள் இவை. சென்னைநகர குற்றங்களும், போலீசின் கண்டுபிடிப்புகளும் பற்றி கமிஷனர் அவ்வப்போதுபுள்ளிவிவரங்களை வெளியிடுவது வழக்கம்.

அதன்படி வெள்ளிக் கிழமை அவர் வெளியிட்ட தகவல்கள் இதோ:

10.5.2000 முதல் 6.7.2000 வரை 57 நாட்களில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டதிருட்டு, கொள்ளை வழக்குகள் 357.

இவை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 245.

இவர்களில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 88 பேர்.

இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.79 லட்சத்து 62,995.அதில் ரொக்கப் பணம் 3 லட்சத்து 19 295.

தங்க நகைகள் 219 சவரன். வெள்ளி நகைகள் ஆறே முக்கால் கிலோ. ஒருபஞ்சலோக அம்மன் சிலை (5 லட்ச ரூபாய் மதிப்புள்ளது). மற்றும் டி.வி. உள்ளிட்டஎலக்ட்ரானிக் பொருட்கள்.

92 மோட்டார் சைக்கிள்கள். 5 ஆட்டோ. 7 கார். 15 சைக்கிள்களும்மீட்கப்பட்டுள்ளன என்றார் காளிமுத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X