தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இந்தோனேசிய வன்முறையில் 22 பேர் சாவு

ஜகார்த்தா:

இந்தோனேஷியாவில் மொலுக்காஸ் பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் இறந்தனர்.தாக்குதலுக்குப் பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இச் செய்தியை ஜகார்த்தா உள்ள அன்தாரா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொலுக்காஸ் பகுதியில் சில தினங்களுக்கு முன் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் இறந்தார். அதற்குப் பதில் தாக்குதலாகசமீபத்திய தாக்குதல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்களா என்பது தெரியவில்லை. ஆனால், மொலுக்காஸ் பகுதியில் உள்ள வாய் கிராமத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன்நுழைந்த தீவிரவாதிகள் சிலர் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இதில் 22 பேர் இறந்தனர். 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்குப் பயந்து அருகில் உள்ளகாடுகளை நோக்கி ஓடிவிட்டனர். பல வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன.

மொலுக்காஸில் 1999-ம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரைஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.

கடந்த வாரம் அம்பான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 40பேர் கொல்லப்பட்டனர். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தபோதும் இம் மோதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+