தமிழகத்தில் இன்று
இந்தோனேசிய வன்முறையில் 22 பேர் சாவு
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவில் மொலுக்காஸ் பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் இறந்தனர்.தாக்குதலுக்குப் பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இச் செய்தியை ஜகார்த்தா உள்ள அன்தாரா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொலுக்காஸ் பகுதியில் சில தினங்களுக்கு முன் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் இறந்தார். அதற்குப் பதில் தாக்குதலாகசமீபத்திய தாக்குதல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்களா என்பது தெரியவில்லை. ஆனால், மொலுக்காஸ் பகுதியில் உள்ள வாய் கிராமத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன்நுழைந்த தீவிரவாதிகள் சிலர் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இதில் 22 பேர் இறந்தனர். 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்குப் பயந்து அருகில் உள்ளகாடுகளை நோக்கி ஓடிவிட்டனர். பல வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன.
மொலுக்காஸில் 1999-ம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரைஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.
கடந்த வாரம் அம்பான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 40பேர் கொல்லப்பட்டனர். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தபோதும் இம் மோதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications