For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இந்தோனேசிய வன்முறையில் 22 பேர் சாவு

ஜகார்த்தா:

இந்தோனேஷியாவில் மொலுக்காஸ் பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் இறந்தனர்.தாக்குதலுக்குப் பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இச் செய்தியை ஜகார்த்தா உள்ள அன்தாரா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொலுக்காஸ் பகுதியில் சில தினங்களுக்கு முன் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் இறந்தார். அதற்குப் பதில் தாக்குதலாகசமீபத்திய தாக்குதல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்களா என்பது தெரியவில்லை. ஆனால், மொலுக்காஸ் பகுதியில் உள்ள வாய் கிராமத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன்நுழைந்த தீவிரவாதிகள் சிலர் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இதில் 22 பேர் இறந்தனர். 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்குப் பயந்து அருகில் உள்ளகாடுகளை நோக்கி ஓடிவிட்டனர். பல வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன.

மொலுக்காஸில் 1999-ம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரைஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.

கடந்த வாரம் அம்பான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 40பேர் கொல்லப்பட்டனர். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தபோதும் இம் மோதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X