தமிழகத்தில் இன்று
அமெரிக்க பாதுகாப்பு வளைய ஏவுகணைச் சோதனை தோல்வி
வாஷிங்டன்:
அமெரிக்கா மேற்கண்ட ஏவுகணைச் சோதனை இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது.
அமெரிக்க தேசிய ஏவுகணை பாதுகாப்பு வளைய அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை கலிபோர்னியாவில் உள்ள வான்டென்பெர்க் விமானப்படைத் தளத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை விண்ணில் செலுத்தி சோதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மத்திய பசிபிக் பெருங்கடலில் குவாஜலீன் என்ற இடத்திலிருந்து ஏவுகணையின் இலக்கு விண்ணில்செலுத்தப்பட்டது. மணிக்கு சுமார் 24 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்ட ஏவுகணை இலக்கைத் தாக்கத் தவறிவிட்டது.
இதனால், ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்தது. இரண்டாவது முறையாக இந்த ஏவுகணைச் சோதனை தோல்வியடைந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் முதன்முறையாக இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டது. அப்போது சரியாக இலக்கைத் தாக்கியது ஏவுகணை.
ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாகச் சோதிக்கப்பட்டபோது இலக்கைத் தாக்க ஏவுகணை தவறிவிட்டது. தற்போது இரண்டாவதுமுறையாக ஏவுகணைச் சோதனை தோல்வியடைந்துள்ளது.
இதை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். மேற்கொண்டு எந்தத் தகவலையும் அவர்தெரிவிக்க மறுத்துவிட்டார்.
நாட்டின் பாதுகாப்புக்கு ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கு ரஷியா மற்றும் சீனாவிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.ஆகவே, இப் பிரச்சினை குறித்து அடுத்த சில வாரங்களில் முக்கிய முடிவை அதிபர் பில் கிளின்டன் எடுக்கவுள்ளார்.
இந் நிலையில், இரண்டாவது முறையாக புதிய ஏவுகணைப் பரிசோதனை தோல்வியில் முடிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications