தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தேர்தல் யுக்தி குறித்து மூப்பனார் ஆலோசனை

சென்னை:

தேர்தலுக்கான யுக்திகள் குறித்து மாவட்டத் தலைவர்களுடன் மூப்பனார் சென்னையில்மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

த.மா.கா மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை சத்தியமூர்த்தி பவனில்நடைபெற்றது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51 மாவட்டத் தலைவர்கள், மாநிலநிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கட்சியின் நிர்வாக அமைப்புகளை சீர்படுத்தும் வகையில் 36 ஆக இருந்த மாவட்டத்தலைவர் பதவிகளை 51 ஆக உயர்த்தியுள்ளார் மூப்பனார். பெரும்பான்மையானமாவட்டங்களுக்கு புதியவர்களை தலைவராக நியமித்துள்ளார்.

இந்த மாற்றத்திற்கு பின்னர் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டம் இது. சனிக்கிழமை காலை மூப்பனார் தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் மாநல நிர்வாகிகள்ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், 51 மாவட்டத்தலைவர்கள் பங்கேற்றனர்.

கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அவர்கள் மத்தியில் மூப்பனார் பேசினார். காமராஜர்பிறந்த நாள் விழாவை ஒட்டி வருகிற 15ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மாவட்டம்தோறும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கட்சி வளர்ச்சிப் பணிகளில் அதிக அக்கறை செலுத்தும்படியும், தேர்தலுக்கு தயாராகஇருங்கள் என்றும் கட்சியினரை மூப்பனார் கேட்டுக் கொண்டார்.

மேலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அணுகுமுறைகள் குறித்தும்,கூட்டணி விஷயங்கள் குறித்தும் மாவட்டத் தலைவர்களிடம் மூப்பனார் கருத்துக்களைகேட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+