தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஆஸ்கர் விருது சிலைகளை திருடியவருக்கு 6 ஆண்டு சிறை

லாஸ்ஏன்ஜலஸ்:

அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜலஸ் நகரில் இந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் விருதுவழங்கும் விழாவுக்கு முன்பு, 58 ஆஸ்கார் விருது சிலைகளை திருடிய லாரிடிரைவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது.இதில் ஒரு சிலையும், பணமும் தரப்படும். இந்த ஆண்டுக்கான விழா நடப்பதற்கு சிலநாட்களுக்கு முன் 58 சிலைகள் அடங்கிய பெட்டி திருடு போனது.

சில நாட்களுக்குப் பிறகு குப்பைத் தொட்டியில் இந்தப் பெட்டி கிடந்தது.

இதை வில்லி புல்ஜர் என்பவர் கண்டுபிடித்து விருதுக் கமிட்டியினரிடம் கொடுத்தார்.அவருக்கு 50,000 டாலர் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சிலைகளைத் திருடிய லாரன்ஸ் ஈ லிடென்ட் (38) என்ற நபரைபோலீஸார் கைது செய்தனர். அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிகலிபோர்னியா நீதி மன்றம் வெள்ளிககிழமையன்று தீர்ப்பளித்துளளது. 50,000 டாலர்அபராதம் கட்டுமாறும் தீர்ப்பில் கூறப்பட்டது.

லிடென்ட் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். ஆஸ்கர் விருதுகள் அடங்கியபெட்டியைத் திருடி அதை குப்பைத் தொட்டியில் மறைந்து வைத்ததாக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+