தமிழகத்தில் இன்று
மதுரை - குர்லா புதிய எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது
மதுரை:
மதுரை - மும்பை இடையிலான மதுரை-குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, சனிக்கிழமை மதுரை ரயில் நிலையத்தில் கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.
வாராந்திர ரயிலாக இது இயக்கப்படவுள்ளது. குர்லா-மதுரை ரயிலை, குர்லாவில் மத்திய ரயில்வேஇணையமைச்சர் திக்விஜய் சிங் வியாழக்கிழமை துவக்கி வைத்தார். அந்த ரயில், சனிக்கிழமை மதுரைவந்து சேர்ந்தது. இதே ரயில், மாலை 6 மணிக்கு மதுரையிலிருந்து குர்லா புறப்படும். திங்கள்கிழமைகாலை 7.20 மணிக்கு இது குர்லாவை அடையும்.
மதுரைக்கும், மும்பைக்கும் இடையே ரயில் விட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இதன்மூலம் நனவாகியுள்ளது.
புதிய எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க நிகழ்ச்சியில், தமிழக ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் செல்வராஜ்,மதுரை மேயர் குழந்தைவேலு, மதுரை எம்.பி.மோகன், தென்னக ரயில்வே பொது மேலாளர்கீர்த்தி வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.