தமிழகத்தில் இன்று
சென்னை மாணவர்களைத் தேடி வந்த அமெரிக்க வேலைவாய்ப்பு
பெங்களூர்:
இந்தியாவில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 5 பேருக்கு அமெரிக்காவில் உள்ள நிறுவனம் வேலை வாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளது.
சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் வசிக்கும் 5 பேருக்கும் அமெரிக்காவில் உள்ள லூசென்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம் வேலை அளிக்க உள்ளது. இதுதொடர்பான கடிதங்கள் அந்தந்த மாணவ, மாணவியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெல் லாப்ஸ் ஸ்காலர்ஸ் என்ற அமைப்பின் சார்பில் சமீபத்தில் தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. இயற்பியல், ரசாயனம், கணிதம், பொது அறிவு ஆகிய பிரிவுகளில்கேள்விகள் கேட்கப்பட்டன.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 655 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில் பெங்களூரைச் சேர்ந்த அர்ஜுன் கே. பன்சால், விஜயகுமார், சுருதி சந்திரசேகர் மற்றும் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் தியாகராஜன், சந்தீப்வெங்கட்ராமன் ஆகியோர் முதல் 5 இடங்களைப் பெற்றனர்.
5 பேரும் சிறந்த மாணவர்களில் சிறந்த மாணவர்களாகத் தேர்வாகியுள்ளனர். இளம் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கவும், அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் கணிதத் துறையில் அவர்களை ஈடுபடுத்தவும் 5 பேருக்கும் வேலை வாய்ப்பு அளிக்க முன் வந்ததாக அமெரிக்க நிறுவனத்தின்இந்திய கிளை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications